முற்றாக முடங்கியது மாவனெல்ல நகரம்

0
507

மாவனெல்ல நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக நகர் பகுதி முற்றாக முடங்கியுள்ளது.  

வீதிகளில் டயர்கள் போன்றவற்றை பொதுமக்கள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் நிலையில் வீதியெங்கும் டயர்கள் பற்றி எரியும் காட்சிகளையே காண முடிகின்றது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கொதித்தெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அதிகரித்த விலைவாசி, பற்றாக்குறை என மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில்  பொறுத்துப் போக முடியாத பொதுமக்கள் வீதிகளிரல் இறங்கி எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.  

மாவனெல்ல நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் காரணமாக நகர் பகுதி முற்றாக முடங்கியுள்ளது.  

வீதிகளில் டயர்கள் போன்றவற்றை பொதுமக்கள் எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் நிலையில் வீதியெங்கும் டயர்கள் பற்றி எரியும் காட்சிகளையே காண முடிகின்றது. 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் பொதுமக்கள் கொதித்தெழுந்து அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். 

அதிகரித்த விலைவாசி, பற்றாக்குறை என மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் நிலையில்  பொறுத்துப் போக முடியாத பொதுமக்கள் வீதிகளிரல் இறங்கி எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.  

Gallery

Gallery