திருகோணமலை-ஹொரவ்பொத்தானையில் இடம்பெற்ற விபத்து: இளைஞன் பலி!

0
595

திருகோணமலை-ஹொரவ்பொத்தானை பிரதான வீதி ரொட்டவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து நேற்றிரவு (18) 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் கலன்பிந்துனுவெவ-மெகொடவெவ,யகல்ல பகுதியைச் சேர்ந்த சஜித் லக்ஸான் ராஜபக்ச (19வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

விபத்து தொடர்பில் பொலிஸார் சிசிடிவி கெமராக்களை சோதனையிட்டு வருவதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.