புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பாக அரச தலைவர் ஆற்றிய உரை!

0
392

புதிய அமைச்சரவை நியமனம் தொடர்பான அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் அறிக்கை இன்று இரவு ஒலிபரப்பப்படவுள்ளது.

அரச தலைவரின் அறிக்கை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலிகளிலும் இரவு 07.30 மணிக்கு ஒளி, ஒலிபரப்பப்படும் என அரச தலைவரின் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

புதிய அமைச்சரவையை நியமித்த போதிலும், நான்கு அரசாங்க உயர் பதவிகள் மாறாமல் இருக்கும் எனவும் அரச தலைவரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் கீழ் இருந்த அமைச்சுக்கள் மாற்றமில்லாமல் இருக்கும் அதேவேளை மகிந்த ராஜபக்ச பிரதமராக தனது கடமைகளை தொடர்வார் எனவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வெளிவிவகார அமைச்சராக நீடிப்பார், அலி சப்ரி நிதி அமைச்சராக நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது