நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நீங்க விசேட ஈஸ்டர் வழிபாடு

0
384

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நீங்க விசேட ஈஸ்டர் வழிபாடு ஒன்று நேற்று (17) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழிபாடு நேற்று (17) பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

சுயாதீன திருச்சபைகள் ஒன்றிணைத்து முன்னெடுத்த குறித்த வழிபாட்டில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் நெருக்கடி நீங்க விசேட வழிபாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, உயிர்த்த ஞாயிறான நேற்று உலக வாழ் கிறிஸ்தவர்கள் மகிழ்வுடன் கொண்டாடிவரும் நிலையில், எமது நாட்டிலும் அமைதி நிலவி, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இயேசுபிரான் எம் நாட்டினை ஆசீர்வதிக்க வேண்டும் என மன்றாடியிருந்தனர்.