அமைச்சு பதவிகளை இழந்த சிரேஷ்ட உறுப்பினர்கள்: ஒரு மாத காலம் மாத்திரமே பதவி வகித்த அமைச்சர்!

0
559

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுள்ள நிலையில், பல சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் கிடைக்கவில்லை.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, ஜனக பண்டார தென்னகோன், பந்துல குணவர்தன, காமினி லொக்குகே, எஸ்.எம்.சந்திரசேன, சீ.பி. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, டளஸ் அழகப்பெரும, சரத் வீரசேகர. எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

எஸ்.பி.திஸாநாயக்க கைத்தொழில் அமைச்சராக பதவியேற்று சுமார் ஒரு மாத காலம் மாத்திரமே அந்த பதவியை வகித்தார். அவர் கடந்த மார்ச் 3 ஆம் திகதி கைத்தொழில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்திருந்தார்.