23,300 உக்ரைன் வீரர்களை கொன்று குவித்த ரஷ்யா

0
595

உக்ரைன் மீது ரஷியா கடந்த 50 நாட்களாக போர் தொடுத்து வரும் நிலையில் இதுவரை 23,300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உக்ரைன்  மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இதுவரையில் உக்ரைன் படை வீரர்கள் 23 ஆயிரத்து 300 பேர் கொல்லப்பட்டதாக ரஷிய இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி உக்ரைன் போரில், அந்த நாட்டின் 23 ஆயிரத்து 367 வீரர்கள் பலியாகி உள்ளனர். அதேசமயம் மரியுபோல் நகரில் கடந்த நாளில் மட்டும் 4 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , இந்த போரில் ரஷிய படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.