ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
545

அரச தலைவர் செயலகத்திற்கான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று தடை உத்தரவு பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தடை உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் பெற்றுக்கொள்ள கோட்டை காவற்துறையினர் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.