இன்று முதல் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் ஆரம்பம்!

0
308

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தலைமையிலான குழுவொன்று நேற்று வொஷிங்டன் நோக்கி பயணிமாகினர்.

இதன்படி, இந்த குழுவினர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார்கள்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் இந்திய தரப்பினர் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகம் ஓன்று செய்தி வெளியிட்டுள்ளது.