அனல் மின் நிலையங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் வாக்குறுதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் திட்டமிடப்பட்டிருந்த மின்வெட்டு 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களாக குறைக்கப்படும் எனவும் குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் அறிவித்தார்.