“கோட்டா கோ கம”வை யாழிற்கு கொண்டு செல்வதே அடுத்த கட்ட இலக்கு!

0
529

காலிமுகத்திடலில் கோட்டாபய அரசாங்கத்திற்குக் கெதிரான ஆர்ப்பாட்டத்தை வழிநடத்துபவர்களில் ஒருவரான அனுருத்த பண்டார “கோட்டா கோ கம”வை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதே அடுத்த கட்ட இலக்கு என கருத்து வெளியிட்டுள்ளார்.

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.