நாளை கூடவுள்ள புதிய அமைச்சரவை! நடக்க போவது என்ன?

0
516

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக புதிய அமைச்சரவை நாளை(18) நியமிக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை பலவீனப்படுத்தியவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அமைக்கும் இடைக்கால அரசாங்கத்தின் ஸ்திர தன்மை மீது நம்பிக்கை கொள்ளமுடியாதெனவும், பொதுஜன பெரமுன தலைமையிலான அமைச்சரவையே ஸ்தாபிக்கப்படுமென சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக திட்டமிட்ட வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் யோசனைக்கு பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியள்ளதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்துக்கு துரோகம் இழைத்த தரப்பினருடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையை ஸ்தாபிக்க வேண்டுமெனவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அரசியல் மற்றும் சமூக கட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள நெருக்கடி நிலைக்கு எதிர்வரும் வாரமளவில் சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எந்தக் காரணத்துக்காகவும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகமாட்டாரென சாகர காரியவசம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.