யாழில் வீடொன்றின் மீது தாக்குதல்: பொலிஸார் விசாரணை

0
505

யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் வேளை இடம்பெற்ற இத் தாக்குதலில் வீட்டில் படலை, ஜன்னல்கள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கும் அயல் வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery
Gallery
Gallery