காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக யாழில் தீப்பந்த போராட்டம்!

0
453

யாழ்ப்பாணம் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் மாபெரும் தீப்பந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து காலிமுகத்திடலில் கடந்த 9 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், (M.A.Sumanthiran) இளைஞர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.