மாலி நாட்டுக்கான அமெரிக்க தூதராக இந்திய வம்சாவளி பெண் ரச்சனா சச்தேவா கோர்ஹோனனை ஜனாதிபதி ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
இவர் தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறையில் துணை உதவிச்செயலாளராகவும், அண்டை கிழக்கு விவகாரங்கள் மற்றும் ஆசிய விவகார பணியக ஒருங்கணைந்த நிர்வாக அலுவலகத்தின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றுகிறார்.
மேலும் சவுதி அரேபியாவில் தரனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முதன்மை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நிர்வாகப்பிரிவின் தலைமைப்பொறுப்பையும் இவர் வகித்துள்ளார்.