நாட்டை ஒரு வாரம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டங்கள் அவசர ஆலோசனை!!

0
374

நாட்டை ஒருவார காலம் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது என்று அறிய முடிகின்றது.

எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் நெருக்கடி மற்றும் தேக்க நிலைமை நீடிப்பதை அடுத்தே நாட்டை முடக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்படுகின்றது என்று கூறப்படுகின்றது.

ஒரு வாரகாலம் நாட்டை முடக்கி அத்தியாவசிய சேவைகளைச் சீர் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டால், இன்று மாலை அது தொடர்பான அறிவித்தல் வெளியாகலாம் என்று அரச உயர்மட்டங்களைச் சுட்டிக்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.