உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ; உடற்பாகங்களை தோண்டியெடுக்க நடவடிக்கை!

0
415

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தொடர்ந்து மர்மமாக உள்ள, நீர்கொழும்பு – கட்டுவபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்தூன் எனும் குண்டுதாரியின் மனைவியான புலஸ்தினி மகேந்திரன் எனும் சாராவுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் வெளிப்படுத்த மீண்டும் டிஎன்ஏ.பரிசோதனைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாக்குதல்தாரிகளை உறுதிசெய்த டி.என்.ஏ. அறிக்கை | Virakesari.lk

இதன்படி சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தார்.

தற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில், கல்முனையின் சாய்ந்தமருது பகுதியில் வெடிப்பின் பின்னர் அடையாளம் காணப்பட்டு மீட்கப்பட்ட பயங்கரவாதிகளின் உடற்பாகங்களை மீள தோண்டி எடுத்து டி.என்ஏ.பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.

‘2019 ஏப்ரல் 21 ஆம் திகதி சாய்ந்தமருது -வெலிவேரியன் பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படைகளுடனான மோதலின்போது குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.