வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாரிய சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்பு!

0
529

நுவரெலியா மாவட்டம் கினிகத்தேனை – அம்பகமுவ பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 230 வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக விலைகளுக்கு விற்க இவ்வாறு சமையல் எரிவாயு கொள்கலன்களை பதுக்கி வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது. 

பொலிஸாரும், நுவரெலியா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளும் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இந்த எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.

12.5 கிலோகிராம் எடைக்கொண்ட 177 கொள்கலன்களும், 5 கிலோகிராம் எடைக்கொண்ட 28 கொள்கலன்களும், 2.5 கிலோகிராம் எடைகொண்ட 25 கொள்கலன்களும் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த எரிவாயு கொள்கலன்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.