யாழில் பெரும் தொகை போதை மாத்திரைகள் மீட்பு

0
344

யாழ்.ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களுடன் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்று சந்தேக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஊரெழு பகுதியில் போதை மாத்திரை வியாபாரம் இடம்பெறுவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் பல நாட்களாக தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் , போதை மாத்திரை வியாபாரம் செய்யும் சந்தேகநபரை கையும் களவுமாக பிடித்தனர்.

இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 500க்கும் மேற்பட்ட போதை மருந்துகள் மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.