ராஜபக்ச இருட்டு அகல வேண்டும் – சுமந்திரன் பிரார்த்தனை

0
528

அரச தலைவர் பொருளாதார பின்னடைவு, யுத்தக் குற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ( M. A. Sumanthiran) தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சுமந்திரன் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ராஜபக்ச இருட்டு அகன்று போக வேண்டும். இன,மத,மொழி வேறுபாடின்றி அரச தலைவர் பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.

தற்போது அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம்.

போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டாரர்கள் விரும்புகிறார்கள். ஆகையினால், போராட்டம் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, அரச தலைவர் கோட்டாபயவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, நிறைவேற்றதிகார அரச தலைவர் முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும்” என்றார்.