யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது

0
411

யாழில் இருந்து இந்தியா தப்பிச் செல்ல முயன்ற ஐவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதர நெருக்கடி காரணமாக இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற சமயமே இன்று காலை (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இருந்து ஒரு பெண், ஓர் குழந்தை மற்றும் 3 ஆண்களே இவ்வாறு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.