உணவு மற்றும் மருந்துக்காக ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ளும் சீன மக்கள்!

0
487

சீனாவின் ஷாங்காய் நகரில் கொடூரமான கொரோனா கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ள மக்கள் உணவு மற்றும் மருந்துகளுக்காக அடித்துக் கொள்ளும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா மருத்துவமனையில் வலுகட்டாயமாக அடைக்கப்பட்டதாக கூறப்படும் பெண், தனக்கு வழங்கிய உணவை தூக்கி வீசி விட்டு கண்ணீர் விட்டும் கதறி அழுகிறார்.

மற்றொரு புறம் உணவு மற்றும் மருந்துகள் முறையாக வழங்கப்படாததை அடுத்து வீதிகளுக்கு வந்த மக்கள் சேமிப்பு கிட்டங்கியை சூறையாடி தங்களுக்கு தேவையான பொருட்களை அள்ளிச் சென்றனர்.

மேலும் அதிகாரிகளுக்கு எதிராக பொது மக்கள் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.