மக்களுக்கு மறைத்து இரகசியமாக புத்தாண்டு கொண்டாடிய அண்ணன் தம்பிகள்!

0
432

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இம்முறை தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தினை நாட்டு மக்களுக்கு மறைத்து விட்டதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தமது வீட்டில் புத்தாண்டு சம்பிரதாயங்கள் மேற்கொண்ட முறை தொடர்பில் எவ்வித நேரடி ஒளிபரப்புகளும் வெளியாகவில்லை.

அதேசமயம் இதற்கு முன்னர் ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு பிரமாண்டமான முறையில் இடம்பெறுவது வழமையாகும். விசேடமாக பிரதமர் புத்தாண்டு சம்பிரதாயங்களை நிறைவேற்றும் காட்சி நேரலையாக ஒளிபரப்புவதற்கு தொலைகாட்சி சேவைகள் நடவடிக்கை மேற்கொண்டிருக்கும்.

ஆனால் இம்முறை தேசிய தொலைகாட்சியினால் பிரதமர் வீடு புத்தாண்டு சம்பிரதாயங்கள் ஏனைய வருடங்கள் போன்றே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளதால் அதிருப்தி காரணமாக ஒளிரப்புகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.