இலங்கை வரலாற்றில் இருண்ட நாள் இதுவே!மன வருத்தத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்

0
593

சிறிலங்காவின் வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள். கூறப்பட்டதை செவிமடுத்திருந்தால் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டிருக்காது” என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் சிறிலங்காவிற்கு இல்லை என்றும் அது இடைநிறுத்தப்படும் என்றும் நிதியமைச்சு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இப்போது எங்களால் எதுவும் செய்ய முடியாததால் இந்த முடிவை எடுத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.