போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்பதே ராஜபக்ச குடும்பம் தப்பிக்க ஒரே வழி !

0
593

ஒரு தோற்றுப்போன அரசாங்கம் தோல்வியின் விளிம்பிலிருக்கின்ற ராஜபக்ச குடும்பம் உடனடியாக போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை ஏற்று நியாயமாக நடந்து கொண்டால் உலகப் பந்தில் தப்பிப் பிழைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

சித்திரைப் புத்தாண்டு தினமான இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கமானது தனது மக்களைச் சரியான திசையில் வழிநடத்தி செல்லாது ஊழல்களும், கொள்ளைகளும் மலிந்த ஒரு நாடாக மாறி சிங்கள மக்கள் கூடி தெருக்களில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

குறிப்பாக இன்று மலர்ந்திருக்கின்ற இந்த புத்தாண்டைக் கூட கொண்டாட முடியாத நிலையில் தெருக்களிலே இருக்கின்ற ஒரு நாடாக இலங்கை காணப்படுகிறது.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம், உணவுப் பொருட்கள் சரியாகக் கிடைக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.