கனடாவில் இருந்து யாழில் உள்ள வன்முறை கும்பலுக்கு அனுப்பட்ட பணம்! அதிர்ச்சி தகவல்

0
594

கனடாவிலிருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு, வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.சுன்னாகம், புனித அந்தோனியார் வீதியில் இருக்கும் வீடொன்றின் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொறுக்கியத்துடன், வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்ததுடன், வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, வீட்டின் உரிமையாளருடன் கனடாவில் உள்ள நபர் ஒருவர் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், அவரது தூண்டுதலில் யாழில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.