கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோகிராம் கஞ்சா!

0
457

நெடுந்தீவு கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோகிராம் எடையுள்ள கேரள கஞ்சா பொதிகள் நெடுந்தீவு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு கடற்படையினர் இன்று அதிகாலை 3 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே இவ்வாறு கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த கஞ்சா பொதிகள் எவ்வாறு மிதந்து வந்தன என்பது தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.