ரம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்ற 3 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து நேற்று முன்தினம் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற 7 பேர் கொண்ட குழுவினர், நேற்று மீண்டும் வவுனியாவுக்கு திரும்பும் வழியில், றம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 7 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
காணாமல் போன மூவரில் இருவர் பெண்கள் எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேநேரம், ஏனைய 4 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன மூவரையும் கண்டறியும் நடவடிக்கையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.