இவ்வருடம் புத்தாண்டு; கொண்டாட முடியாத நிலையில் மக்கள் ஆதங்கம்

0
360
இவ்வருடத்திற்கான புத்தாண்டை கொண்டாட முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதுடன், எரிபொருள், எரிவாயு, பால்மா உள்ளிட்ட சில பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்த நிலையில் நாளைய தினம் தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாட உள்ள மக்கள் பலரும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.   

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே புத்தாண்டு கொண்டாட முடியாத நிலையில் உள்ள தமது ஆதங்கத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.