24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்குமாறு காவற்துறையினருக்கு உத்தரவு

0
518

தமது கடமை நேர உத்தியோக பூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடியவாறு தயார் நிலையில் வைத்திருக்குமாறு காவற்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை காவற்துறை மா அதிபர் சந்தன விக்ரமரட்ன பிறப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

அனைத்து காவற்துறை பொறுப்பதிகாரிகளும், சிரேஷ்ட காவற்துறை அதிகாரிகளும் உதவி காவற்துறை அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் வரை தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ள முடியுமானவாறு செயலில் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நாட்டில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் அமைதியை பேணும் வகையில் இவ்வாறு 24 மணிநேரமும் கடமை நேர உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசிகள் செயலில் இருக்க வேண்டும் என காவற்துறை மா அதிபரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது