கூரிய ஆயுதத்தால் தாக்கி தம்பதியினர் படுகொலை

0
414

 கொடக்கவெல, பல்லேபெத்த பகுதியில் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குறித்த பகுதியிலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொடக்கவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.