சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் கைது

0
447

பலசரக்கு கடைகளில் சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது நேற்று(11) மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி ஊறணி பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத பெற்றோல் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய குறித்த பகுதியிலுள்ள பலசரக்கு கடைகளை பொலிஸார் முற்றுகையிட்டனர்.

சட்டவிரோதமாக பெற்றோல் வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று கடை முதலாளிகளை கைது செய்ததுடன் 30 லீற்றர் பெற்றோலை மீட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.