நாட்டை வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்த நேரிடும்: காமினி விஜேசிங்க

0
512

விரும்பியோ விரும்பாமலோ இன்னும் சில வாரங்களில் நாட்டை வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்த நேரிடும் எனவும், தற்போதைய அரசியலமைப்பு தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களால் திருத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில்,

“நாடு திவால் நிலையின் விளிம்பில் இருப்பதாகவும், டொலர்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் செய்யப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக நான் அறிவித்துள்ளேன். ஆனால் இன்று அதை கவனிக்காமல் செலவு செய்து அழிவு வாயாக மாற்றப்பட்டுள்ளது.

இன்னும் மூன்று அல்லது நான்கு மாதத்தில் நாட்டை திவாலான நாடாக விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரகடனப்படுத்த வேண்டியிருக்கும்.

எனவே, தற்போதைய நிலையில், இந்த அரசியலமைப்பு திருத்தம் கட்டாயமாக்கப்பட வேண்டியது.நாம் அவர்களை வீட்டிற்கு அனுப்புவது கட்டாயமாகும், ஆனால் அரசியலமைப்பைத் திருத்தும் பணியைச் செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.