ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவத்தால் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை!

0
511

லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொன்றதாக இந்திய பாதுகாப்பு படையினர் இன்று காலை அறிவித்துள்ளனர். தெற்காசியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றாகும். லாகூர், பாகிஸ்தான் அருகில் இவ்வமைப்பின் தளம் அமைந்துள்ளது. காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுதலை செய்து பாகிஸ்தானிடம் இணைக்கவேண்டும் என்பது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் உள்ள சாகிசமட், டிஹெச் போரா பகுதியிலும் அனந்த்நாக்க் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்ட விரேட தேடுதல் நடவடிக்கையின் போது இவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நிலைமையை சமாளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக அனந்த்நாக்கின் சில பகுதிகளில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் காஷ்மீர் பொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.