அரசாங்கத்தின் சதித்திட்டம்! அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர்

0
496

கொழும்பில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களின் செய்திகளை உடனுக்குடன் வெளியிடுவதை தடுக்கும் வகையில் அரசாங்கம் சதித்திட்டத்தை தீட்டியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இதன்படி காலி முகத்திடலைச் சுற்றி இணைய வசதிகளை சீர்குலைக்கும் வகையில் அரச தலைவர் செயலகத்திற்கு அருகில் ‘ஜாமர்’ பொருத்தப்பட்டுள்ளதைக் காணலாம் என சரத் பொன்சேகா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஊழல் ராஜபக்ச ஆட்சி சிக்னல் ஜாமர்களைக் கொண்டு வந்து காலி முகத்திடலைச் சுற்றி இணைய வசதிகளை சீர் குலைக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.