தீடிரென நாட்டுக்குள் நுழைந்த முக்கிய புள்ளி!

0
416

மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்கவுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க , சற்றுமுன்னர் நாட்டுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்குள் , நுழைந்த அவர் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவை, சந்திக்கவுள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநராக பதவிவகித்த அஜிட் நிவார்ட் கப்ரால், அப்பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து , மத்திய வங்கி ஆளுநராக நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.