கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல்

0
367

கொழும்பிற்கு வருகை தருவோருக்கு பொலிஸார் விசேட அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளனர்.

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு பல்வேறு தேவைகளுக்காக மக்கள் தலைநகர் கொழும்பிற்கு வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் நபர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொலிஸார் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.

காலி முகத்திடல், கோட்டை மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் காணப்படுவதனை அவதானிக்க முடிவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனால் மக்கள் வேறு மாற்று வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மாலை கொழும்பின் பல்வேறு பகுதிகளில் பாரியளவில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.