புதிய நிதி அமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ச! வெளியானது உள்ளக தகவல்

0
845

மகிந்த தவிர்ந்த சமல் ராஜபக்ச , நாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பமாட்டாது என சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மகிந்தத ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகம் செய்தி தெரிவித்துள்ளது.

இதேநேரம், ராஜபக்சவின் வேறு எந்த சகோதரர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், முன்னைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.

முன்னர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகரவிற்கு பதவி வழங்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த ராஜபக்ச அரச தலைவராக இருந்த காலத்தில் அவர் நிதி அமைச்சராகவும் இருந்தார் தற்போதைய அரசாங்கத்திலும் முதல் நிதி அமைச்சராக அவரே இருந்தார்.

பின்னர் பசில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவி வகித்திருந்ததோடு, அமைச்சரவை இராஜினாமா செய்ததையடுத்து, அலி சப்ரி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும் அலி சப்ரி 24 மணித்தியாலத்துக்குள் இராஜினாமா செய்திருந்தார்.

அந்தவகையில், கடந்த இரண்டு நாட்களாக நாட்டில் நிதியமைச்சு பதவி வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.