நாடாளுமன்ற நுழைவாயில் பொல்துவ சந்தியில் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கருதி இன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்ற நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் நாடாளுமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மக்களால் பாரிய ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.