காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தாய் மரணம்!

0
322

மகனைத் தேடி மரணமான தாய்க்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த அஞ்சலி நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் 1873ஆவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சி முறை போராட்டம் இடம்பெறும் கொட்டகையில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சுப்பம்மா (கமலா) என்பவரே தனது 69ஆவது வயதில் நேற்றுமுன்தினம் (4) சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் இன்றையதினம் அன்னாரின் உருவப்படத்துக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்ததுடன், மலர் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.

இவரது மகன் சுப்பையா சிவலிங்கம் 13/01/2000 அன்று வவுனியாவில் வைத்து இராணுவத்தால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.