உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாய்மார்களுக்கு நேர்ந்த நிலை! அறுக்கப்படும் நாக்குகள்.. அதிர்ச்சி தகவல்

0
454

உக்ரைனில் குழந்தைகள் கண்முன்னே தாயார்கள் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகிறார்கள் என்ற தகவலை நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி முதல் முறையாக வெளியிட்டுள்ளார்.

உக்ரைனில் ரஷ்யா 6வது வாரமாக போர்த்தாக்குதல் நடத்திவரும் நிலையில், புச்சா நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களை ரஷ்ய ராணுவம் சித்திரவதை செய்து கொலை செய்து இருப்பதாக பல்வேறு குற்றசாட்டுகளை ரஷ்யா மீது உலகநாடுகள் முன்வைத்து வருகின்றன.

ரஷ்ய படையினரால் உக்ரைன் பெண்கள், சிறுமிகள் சீரழிக்கப்படுகிறார்கள் என்ற தகவலும் வரும் நிலையில் அது குறித்து ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இதுவரை பேசாமல் இருந்தார். இந்நிலையில் முதல் முறையாக அது தொடர்பில் அவர் பேசியுள்ளார்.

ஜெலன்ஸ்கி கூறுகையில், உக்ரேனிய தாய்மார்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் ரஷ்ய துருப்புக்கள் பலாத்காரம் செய்தனர். விளாடிமிர் புடினை போர்க்குற்றவாளி என ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்க வேண்டும்.

பல குடும்பங்களை முழுமையாக ரஷ்ய வீரர்கள் கொன்று எரிக்க முயன்றுள்ளனர். இதோடு கொள்ளை செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். குடிமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர், கை கால்கள் வெட்டப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்தனர்.

மேலும் பலரின் நாக்குகள் வெட்டப்பட்டது, ஏனெனில் அவர்கள் பேசுவதை ரஷ்ய வீரர்கள் கேட்க விரும்பவில்லை. புச்சாவில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று அவர் கூறியுள்ளார்.