நாளை மறுதினம் யாழில் மாபெரும் கண்டனப்பேரணி!

0
346

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டைத் தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.

இப்போராட்டத்துக்கு நாளை மறுதினம் (07) காலை 10 மணிக்கு தொல்புரம் வழக்கம்பரை அம்மன் ஆலய முன்றிலில் இன,மத, கட்சி பேதமின்றி அனைத்து மக்களும் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சியைக் கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சாரம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டு மற்றும் விலை உயர்வினைக் கண்டித்தே இப்போராட்டம் இடம்பெறவுள்ளது.