நாட்டில் மக்கள் புரட்சியை தடுக்க முடியாது! எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு

0
339

நாட்டில் மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்று எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் மக்கள் புரட்சி வெடித்துள்ளதாகவும், மக்கள் புரட்சியை தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோலுக்கு வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது.

எரிவாயுக்கு, அத்தியாவசியப் பொருட்களுக்கு என்று அனைத்திற்கும் வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கினை பிறப்பிப்பதாலோ அல்லது அவரச காலச் சட்டத்தை கொண்டு வருவதாலோ அன்றி சமூக வலைத்தளங்களை முடக்குவதாலோ மக்கள் புரட்சியை தடுக்க முடியாது. மக்கள் தற்போது இந்த ஆட்சிக்கு எதிராக வெளியே வந்துவிட்டார்.

நாடாளுமன்றம் இணைந்து நிறைவேற்று அதிகாரம் கொண்டு ஜனாதிபதி முறையை மாற்றியமைக்கவேண்டும். நாம் சந்தர்ப்பவாத அரசியலில் அமைச்சுப் பொறுப்புக்களை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காது.

நாம் அரசாங்கம் அமைப்பதாக இருந்தால், பொதுமக்களின் ஆசிர்வாதத்துடனேயே அரசாங்கம் அமைப்போம்.

இதேவேளை இன்று பொதுமக்கள் தமது எதிர்ப்பை வெளியிடுவதற்காக நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.