ஜனாதிபதி கல்வி பயின்ற கல்லூரியின் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

0
257

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள ஆனந்த கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

மருதனையில் பிரதான வீதிக்கு எதிரில் ஒன்றுக்கூட்டிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொருளாதார கஷ்டங்கள் சம்பந்தமாக பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் அருகில் இருக்கும் பலர் கலந்துக்கொண்டதன் காரணமாக மருதானையை அண்மித்த பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆனந்த கல்லூரியில் கல்வி கற்றவர் என்பதுடன் தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் பலர் ஆனந்த கல்லூரியின் பழைய மாணவர்கள் என்பதுடன் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, இராணுவ தளபதி சவேந்திர சில்வா ஆகியோரும் இந்த கல்லூரியில் கல்வி கற்றவர்கள்.