அரச எதிர்ப்பு போராட்டத்தில் மக்களுடன் கலந்து கொண்ட கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

0
442

தென்னிலங்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கோட்டாபயவின் இல்லம், மஹிந்தவின் இல்லம், சமல் ராஜபக்ஷவின் இல்லம் மற்றம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் எதிரான முற்றுகைப் போராட்டங்கள் இடம்பெற்ற வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய மஹிந்த அரசாங்கமே காரணம் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

இந்த போராட்டத்தில் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையுடன் பல அருட்தந்தைகளும், கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளும் இணைந்து மக்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாகைகளையும் தேசியக் கொடியையும் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.