நிறுத்தி வைக்கப்பட்ட கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள்

0
430

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகிய போதிலும் 2 நிமிடங்கள் மட்டுமே நீடித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

S&P SL20 சுட்டெண் முந்தைய நாளை விட 5% குறைந்ததன் காரணமாகப் பங்குச் சந்தை பரிவர்த்தனை சுமார் 30 நிமிடங்களுக்கு இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பங்குச் சந்தையின் நாளாந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை முற்பகல் 10.32 மணிக்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், முற்பகல் 11.02 மணிக்குப் பங்குச் சந்தை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.