ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய வைத்தியசாலை ஊழியர்கள்!

0
345

கேகாலை வைத்தியசாலையின் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கேகாலை வைத்தியசாலையில் நிலவும் மருத்துவப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, நோயாளர்களுக்கு வழங்குவதற்குரிய போதிய மருந்துகள் இன்மை, மின்வெட்டு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்தே வைத்தியசாலையின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சாலையில் இறங்கி பலகைகள் மூலம் அவர்களின் கோரிக்கையை வெளிப்படுத்தியவாறு போராட்டங்களை நடத்தினர்.