ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு மத்தியில் சிக்கிய அமைச்சர் டக்லஸ்!

0
309

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணத்தில் உள்ள காரியாலயத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் யாழ்ப்பாணத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ். பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ் மாணவர்கள் மட்டுமன்றி சிங்கள மாணவர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைச்சர் டக்லஸ் இன் காரியாலயத்தை சுற்றி வளைத்தமையால், டக்ளஸ் தேவானந்தா காரியாலயத்தில் சிக்கிகொண்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மேலும் இதுதொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.