நாளைய தின மின்துண்டிப்பு தொடர்பாக வெளியான தகவல்!

0
533

நாட்டில் நாளைய தினம் (03) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பான தகவலை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L ஆகிய வலயங்களுக்கு காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 5.30 மணிவரை 02 மணித்தியாலங்களும் 15 நிமிடங்களும், மாலை 5.30 மணிமுதல் இரவு 11.30 மணி வரை மின்வெட்டு அமுலாகவுள்ளது.

மேலும், P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை 10 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை 02 மணித்தியாலங்களும், மாலை 04 மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரை 04 மணித்தியாலங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.