விலைவாசிக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்!

0
476

வாழ்க்கைச்சுமை மற்றும் உணவுப்பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில் ஏனைய தமிழ் அமைப்புக்களும் இணைந்து வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்கள் விலை ஏற்றத்திற்கு எதிராகவும் ராஜபச்சக்களின் அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நடவடிக்கையாகவும் இப்போராட்டம் இடம்பெற்றது.

மண்ணெண்ணெய், பெட்ரோல், சமையல் எரிவாயு , பானைகள், மின்சார உபகரணங்கள் போன்ற சமையலறை உபகரணங்களைச் சுமந்து வந்து இப்போராட்டத்தை மேற்கொண்டனர்.

வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு பொருளாதார சுமைகளைத் தாங்கிய பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.