யாழில் விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி போராட்டம்!

0
341

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயங்கரவாதி அல்ல என தெரிவித்து நபரொருவரால் யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

குறித்த போராட்டம் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இன்று காலை 7.30 மணி முதல் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த நபர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

அத்துடன் நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடியவர் பிரபாகரன் தான் என கூறி இன்னும் பல விடயங்களை உரக்கக்கூறி குறித்த நபர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.